பல்லாக்கு வலியுல்லாஹ் (ரழி)

ஸபீலுல் உலமா,

ஸபீலுல் உலமா,
பல்லாக்கு வலியுல்லாஹ் (ரஹ்மதுல்லாஹி அலைஹி)
ஹபீப் முஹம்மத் ஸதக்கதுல்லாஹ் என்ற இயற்பெயருடய இந்த வலி, மஹான் மாப்பிள்ளை லெப்பை வலியுல்லாஹ் அவர்களின் மருகர்.
இவர்கள் நம்புதாளையில் அதிக காலம் வாழ்ந்து அந்த ஊருக்கு வந்த பெரும் நோய் நீங்க துஆ செய்ததோடு, மறுமை நாள்வரை அந்த ஊருக்கு வராமலிருக்க துஆவும் சொல்லித்தந்துள்ளார்கள்.
இன்றளவும் அவ்வூர் மக்கள் ஒவ்வொரு ஜும்ஆ நாளும் அதை ஓதாமல் பள்ளியை விட்டு வீடு செல்வதில்லை. அங்குள்ள சிறுவர்கள் கூட அவர்களின் மான்பை உணர்ந்துள்ளனர்.
ஒரு முறை இவர்கள் கடற்கரை ஓரமாக சென்று கொண்டிருக்கும் போது ஒரு மீனவர் விலைபோகாத ஒருவகை மீன்களை வலையில் எடுத்து வந்து
"
மஹான் அவர்களே! எனக்கு விலைபோகாத இந்த மீன்தான் அடிக்கடி கிடைக்கிறது. இதனால் எனக்கு பெரும் கஷ்டமாக உள்ளது. எனது இந்த வறுமைக்கு ஏதாவது ஒரு வழி செய்யுங்கள்"என்று கெஞ்சினார். அப்போது மஹான் அவர்கள் கடலுக்கருகில் வந்து அந்த மீன் ஜாதியை பார்த்து அவற்றிடம் "இனிமேல் நீங்கள் இந்த பகுதிக்குள் நுழயக்கூடாது" என்று தடை விதித்தனர்.
ஸுப்ஹானல்லாஹ்! என்ன ஆச்சரியம்!
இன்றுவரை அந்த மீனினமே நம்புதாளைப்பகுதி வாழ் மீனவர்களுக்கு
கிடைப்பதில்லை.
இது மஹான் ''அவர்கள்'' என்பதற்கான பெரும் சான்று.


No comments:

Post a Comment