இராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை என்ற
கிராமத்தின் சிறப்புகள்: நம்புதாளை என்று பெயர் வர காரணம் இந்த ஊரில் தாழம் பூ
அதிகமாக காடு போன்று காட்சியளித்தால் தாழக்காடு என பெயர் பெற்றது.பிற்க்காலத்தில்
பூந்தாழை எனபெயர் பெற்று இக்காலத்தில் நம்புதாளை எனும் பெயரில் உள்ளது.இந்த ஊர்
கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்து உள்ளது.இந்த ஊர் பழமையான அற்புதம் நிகழ்ந்த
ஊர்.இந்த ஊருக்கு வரும் விருந்தினரை அன்பு,அரவனைப்பு,மற்றும் பாசத்திற்கு எள்ளலவும் இவ்வூர் மக்கள் குறை வைக்க மாட்டார்கள்.
தொழில்: இவ்வூர் மக்கள் பெரும்பாலும் அயல்நாட்டில் தொழில் புரிவோராக இருந்து
வருக்கின்றன. வீட்டின் பெயர்கள்: இங்கு உள்ள அனைத்து வீட்டிற்க்கும் புனை பெயர்கள்
உள்ளன.பெரும்பாலும் புனைபெயரை உச்சரித்தை அழைப்பார்கள் பெருமை: இவ்வூர் பல
வலிமார்களை,பெற்று மற்றும் தத்தெடுத்த ஊர்.பல
உலமாக்களை உருவாக்கி கொண்டு இருக்கும் ஊர்.பல மாவட்டங்களில் இந்த ஊரை சேர்ந்த
உலமாக்கள் பள்ளிவாசல்களில் இமாம்களாக பனிபுரிந்து வருகின்றன. கல்வி: பல
மருத்துவர்களையும் பட்டதாரிகளையும்,உருவாக்கிய மற்றும் உருவாக்கி கொண்டு இருக்கும் ஊர்.
கவிஞர்கள். பல கவிஞர்கள் இந்த ஊரில் இருந்து வருகின்றன. EX.தாழை மதியவன், திருமணம். இவ்வூரில் திருமனம்
பெரும்பாலும் சொந்த பந்தத்தில் திருமனம் செய்து கொள்வார்கள். சாப்பாடு: இவ்வூரில்
வட்லாப்பம்,கோழியாப்பம்,ஓட்டு மாவு,வெங்காய பனியான்.முட்டடை பனியான்.பாச்சோறு, களியா,ஆகிய உணவுகள் பெயர் பெற்றவை.
விளையாட்டுகள். கிரிக்கெட்,கால்பந்து,கைபந்து,அரிமுரி கிரிச்சான்,காவியம்,கிட்டி கம்பு,போலக்கா,கல்லா மன்னா,தெந்தான்.பம்பரம்.கபடி.கன்னா மூச்சி.புட்டு,எலிபந்து.தொட்டு,ஆகியவை. குளங்கள்: பெயர்கள்.சேவுச்சப்பா,ஆவடியான்,ஆய்குளம்,கோவில் குளம்,மஞ்சகரச்சான்,ஆல ஊரானி,கண்மாய்,ஆகியவை உள்ளன. பள்ளிவாசல்: கிழக்கு,மேற்கு,வடக்கு,மூன்று திசைகளில் பள்ளிகள் உள்ளன. மொழி
உச்சரிப்பு: இவ்வூரில் வா லா,போ லா,லா வார்த்தைகள் அதிகமாக உச்சரிக்கபடும். தெருக்கள்; கிழக்கு தெரு,மேலத் தெரு,புது தெரு,படையாச்சி தெரு,மரவர் தெரு,கண்மாய் தெரு,முத்து பஜார் தெரு.சோனா தெரு,தெற்கு தெரு,பல்லாக்கு வழியுல்லா தெரு,சரிக்கி தெரு,சதாம் உசேன் தெரு,மதினா நகர், அரசு நிலையங்கள்: இவ்வூரில் அரசு உயர்நிலைப்பள்ளியும்,அல்ஹிலால் பள்ளியும்,மூண்று அங்கன்வாடி பள்ளியும்,ஒரு அரசு நூலகமும்,யுனியன் பாங்க் ஆப் இந்தியா என்ற
வங்கியும் உள்ளன.தபால் நிலையம் ஆகிய அரசு நிலைகள் இயங்கி வருகின்றன. மக்கள் தொகை:
இவ்வூரில் 20000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றன.
மதரஸா: இரண்டு மக்தப் மதரஸாவும்,ஒரு நிஸ்வான் மதரஸாவும் இயங்கி
வருகிறது.(இராமநாதபுரம் மாவட்டத்தில் நிஸ்வான் மதரஸா முதலாவது தொடக்கப்பட்ட என்ற
பெருமையும் உள்ளது. திருவாடனை தாலூகா: இவ்வூரில் ஊராட்சி தேர்தலில் திருவாடனை
தாலுகா அளவில் மக்கள் தொகையில் முதல் இடத்தில் உள்ளது. செல்வந்தவர்கள்: இவ்வூரில்
செல்வந்தவர்கள் அதிக அளவில் உள்ளன.(சென்னை,மதுரை,திருச்சி,கோவை,மற்றும் அயல் நாடு அகிய இடங்களில் வசித்து
வருகின்றன. குறிப்பு : தனி நபரின் கருத்துகள். வேண்டுக்கோள்: இவ்வூர் மென்மேலூம்
வளர்ச்சி அடைய இறைவன் இடம் தூஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
No comments:
Post a Comment